”ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – இதுதான் நாம் காட்டும் விருந்தோம்பலா?” என்ற கேள்வியுடன் பகிரப்படும் காணொளி ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புண்ணியத் தலமான ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஒரு சிறிய விபத்து அல்லது கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. எதுவாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
"Attack on tourists in Rameswaram – Is this our hospitality? The safety of pilgrims is questionable. Let's avoid violence and respect the law. Let's protect the peace of the island! pic.twitter.com/KNsFVyvzAf
— Sk Palanikumar Yadav (@p_nikumar) January 2, 2026
அமைதிப் பூங்காவான ராமேஸ்வரம் தீவின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் இத்தகைய சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளிடம் உள்ளூர் மக்கள் கனிவாக நடக்க வேண்டியது அவசியம். வன்முறையைத் தவிர்த்து, சட்டத்தை மதித்து நடப்பதன் மூலமே புனிதத் தலத்தின் அமைதியைப் பாதுகாக்க முடியும். இந்த மோதல் குறித்துப் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
