தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் போக்கில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணைய முன்னாள் அதிகாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 87 பேர் தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது என்றும் அரசியல் சட்ட 324-வது பிரிவின்படி ED, சிபிஐ. IT அமைப்புகளை ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.