பொதுமக்களிடம் மத்திய அரசு திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் நாடு தழுவிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் புதுவை மாநிலம் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் வைத்து இந்த பிரச்சாரத்தின் நிறைவு விழா நடந்தது.

இந்த விழாவை ஆரியங்குப்பம் தொகுதி எம்எல்ஏ பாஸ்கர் தலைமை தாங்க உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் நிகழ்ச்சியின் நோடல் அதிகாரியுமான ராதா கிருஷ்ணன் நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை இயக்குனர், ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அரியங்குப்பம் கொம்யூனில் நடந்த ஏழு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான மொத்த ஏற்பாடுகளையும் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தயார் செய்தார்.