மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரே நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் அடிப்படை சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் இந்தியாவில் அடுத்த வருடம் லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த இரண்டு அறிவிப்புகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 46 சதவீத அடிப்படையில் அகவிலைப்படி விலையில் கூடிய விரைவில் நான்கு சதவீதம் உயர்வு பெறப்பட்டு 50% அடிப்படையில் அகவிலைப்படி பலனை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.