மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் 4% அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வரை ஜூலை மாதத்திற்கான அளவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் உள்ள நிலையில் இது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பொதுவாகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக பணவீக்கம் திடீரென்று அதிகரித்துள்ளது.

இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகலவிலைப்படி உயர்வை இருக்கலாம் என்று அகில இந்திய ரயில்வே மேன்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனவே அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீதம் அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் மாத அடிப்படை சம்பளமாக 36 ஆயிரத்து 500 ரூபாய் பெறும் ஊழியர்களுக்கு DA 16,425 ரூபாயாக உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.