சேலம் மாவட்டத்தில் உள்ள கவர் பண்ணை கிராமத்தில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இலக்கியா(18) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெய்சங்கர் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெய்சங்கர் தனது மனைவியிடம் மது போதையில் தகராறு செய்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த இலக்கியா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இலக்கியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.