காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்க தான் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி ‌ போராடப்போவதில்லை.

ஏனெனில் தமிழ்நாட்டில் கிராமங்கள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்த பெருமை எடப்பாடி பழனிச்சாமியை சேரும். அவருடைய சாதனையால் தான் தமிழ்நாட்டில் அதிக அளவிலான டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. இதுதான் ஊர் அறிந்த உண்மை என்று கூறியுள்ளார். மேலும் கிராமங்கள் தோறும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.