தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை இனி தமிழ் பாடம் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே அனைத்து தனியார் பள்ளிகளும் தகுதியான தமிழ் ஆசிரியர்களை பணியமர்த்தே மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கற்றுத் தர வேண்டும் எனவும் பொது தேர்வில் தமிழை ஒரு தேர்வாக மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.