
திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறை மீது இது போன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை. திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் இரண்டு பக்தர்கள் உடல்நல குறைவு காரணமாகவே உயிரிழந்தனர். கூட்ட நெரிசல் காரணமாக இல்லை.
பக்தர்களின் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவிக்காக 17 திருக்கோவில்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து திருக்கோவில்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, முதியோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தனி வரிசைமுறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
