இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் பொதுமக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் மதத்தை ஆயுதமாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் வெறுப்புக்கு எதிராகவும் வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.