தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் ரத்னம் படத்தை வெளியிட விடாமல் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பரபரப்பு குற்றசாட்டினை முன் வைத்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், திருச்சி தஞ்சாவூர் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்திலிருந்து எனக்கு ஒரு அறிக்கை வந்துள்ளது.

அதில் ரத்னம் படத்திற்கான விநியோகத்தொகை உரிமையை தந்தால் மட்டும்தான் திருச்சி தஞ்சையில் படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தொகையை செலுத்துவதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இது கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு சமமான வேலை. எனக்கே இந்த கதி என்றால் புதுமுக நடிகர்களின் நிலை என்ன.? அவர்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடி ஏற்படும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் விஷாலின் இந்த ஆடியோ தற்போது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.