மணிப்பூரில் ராகுல் காந்தி யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மேற்கொள்ள இருந்த இந்திய நீதி யாத்திரைக்கு அனுமதி அளித்தது மணிப்பூர் அரசு. பாதுகாப்பு காரணங்களை சுட்டி காட்டி அனுமதி மறுத்திருந்த நிலையில் மீண்டும் அனுமதி வழங்கி மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. குறைந்த அளவு தொண்டர்களுடன் யாத்திரை நடத்திக் கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் மணிப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. திட்டமிட்டபடி 14-ஆம் தேதி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய்  யாத்திரை இம்பாலில் இருந்து தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.