மடிப்பிச்சை எடுத்தாவது தேர்தலில் போட்டியிடுவேன் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்காக நான் கட்சி தொடங்கியுள்ளேன். வேறு எந்த நோக்கத்திற்காகவும் இல்லை. வருமானம் பார்க்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லை. நடிப்பதற்கு முன்பே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். அடுத்தவர்களைப் போல நடிகர் கட்சி தொடங்கியுள்ளார் என என்னை கூறுவது தவறு என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.