பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் தொகுதி வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பண்ருட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசும் பொழுது, “இந்த தொகுதியில் தங்கர்பச்சானை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் என்னுடைய சொந்த மைத்துனர் தான். மச்சானா? பச்சானா? என்று கேட்டால் நான் பச்சானை தான் சொல்லுவேன்.

விஷ்ணு பிரசாத்தின் சொந்த மாவட்டம் திருவண்ணாமலை. அவர் வசிப்பது சென்னையில். அவருக்கு கடலூரில் என்ன வேலை? உங்களுக்கும், கடலூருக்கும் என்ன சம்மந்தம்?” என்று பேசினார்.