கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பிப்ரவரி 23ஆம் தேதி இன்று  முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. வரும் மார்க்கமாக மங்களூரில் இருந்து சனிக்கிழமை புறப்படும் விவேக் அதிவிரைவு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.