மக்கள் நீதி மய்யம் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழிவகுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்..

இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயிரே உறவே தமிழே வணக்கம்! வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி நம் கட்சியின் 6-ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக கட்சி வளர்ச்சி பணியாற்ற கிராமங்களை நோக்கி நாம் செல்ல வேண்டும். கட்சியினர் அனைவரும் மக்கள் நீதி மய்யம் கொடியை பிப்ரவரி 21ஆம் தேதி நகரங்களில் மட்டும் இன்றி அனைத்து கிராமங்களிலும் ஏற்ற வேண்டும்.

அழகான வெண்மேகக் கூட்டங்கள் போல நம் மய்யக் கொடிகள் தமிழ்நாடு முழுவதும் பறக்க வழி வகுக்க வேண்டும்
நம் கட்சி நம் கொடி என்ற உணர்வோடு மக்கள் நீதி மைய்யத்தினர் அனைவரும் தங்கள் பகுதியில் மாற்றுக் கட்சியினர் கொடிகளை விட அதிகமான இடங்களில் நம் கொடி பறக்க விடுவதோடு, தங்கள் இல்லங்களிலும் கொடியேற்றி நம் கட்சியின் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாட கேட்டுக்கொள்கிறேன். நாளை நமதே!” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்..