தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலகத்திலுள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்து உள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது “மக்களை சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பா.ஜ.க-வை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால் தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பா.ஜ.க-வின் அரசியலே மக்கள் விரோத அரசியல். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.