தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு மின் நுகர்வு பதிவாகி வருகிறது. மற்ற மாநிலங்களை விட சென்னையில் மின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின் தேவை எவ்வளவு வந்தாலும் அதனை பூர்த்தி செய்யும் அளவு தமிழக மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் கடந்த மே 15ஆம் தேதி மின் நுகர்வு அதிகபட்சமாக 3991 மெகா வாட் என உச்சத்தை எட்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் வீடுகளில் மின்தடை ஏற்பட்டால் 9498794987என்ற எண்ணுக்கு அழைத்தே புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.