தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று வழங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவம் வீடு வீடாகச் சென்று வழங்கபட்டது. இதற்கான  முதல்கட்ட பணிகள் முடிந்தன. ஒவ்வொரு ரேஷன் கடைகளில் உள்ள பாதியளவு அட்டைதாரர்களுக்கே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டோக்கன், விண்ணப்பம் கிடைக்கப் பெறாதவர்கள் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு சென்று அதனை பெற்று, டோக்கனில் உள்ள தேதிப்படி, பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அளிக்கலாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.