சென்னையில் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மழை சேதாரங்களை பார்வையிட்ட பின் பேசிய அவர், ‘சென்னையில் ஒருசில இடங்களைத்தவிர வேறு எங்கும் மழை நீர் தேங்கவில்லை. நகராட்சிகளில் 4,000க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளார்கள்’ என்றார்.

விடாது மழைக்கு நடுவிலும் இன்று மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இவ்வளவு நாட்கள் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று சென்னையில் விடிய விடிய மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. இதனால் எங்கும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.