வீடுகளில் சமையல் எரிவாய் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு சமீப காலமாகவே தலைவலியாக அமைந்துள்ளது. ஏனெனில் சிலிண்டர் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது இவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை  குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பொது மக்களுடைய நிதி சுமையை குறைக்கும் முயற்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

வீட்டு  சமையல் சிலிண்டருக்கு மத்திய அரசு ஏற்கனவே 200 ரூபாய் மானியம் வழங்கியது என்றும் அவர் கூறினார். மேலும் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் வணிக எரிவாயு சிலிண்டர் 100 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிலையானதாகவே இருக்கிறது.