
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி வடகிழக்கு பருவ மழை இயல்பை விட தமிழ்நாட்டில் 81 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாம். அதிலும் சென்னையில் 84 சதவீதம் அதிகமாக பெய்திருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.