கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி விழாவையொட்டி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் இன்று மூடப்பட்டிருக்கும். அதேநேரத்தில் இணையதள வங்கி சேவைகள் செயல்படும். ஏடிஎம் மைய சேவைகளும் எந்தத் தடையும் இன்றி செயல்படும். நிதியாண்டு 31ஆம் தேதி முடிவதால், நாளை (சனி), நாளை மறுநாள் (ஞாயிறு) வங்கிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது