தமிழ்நாட்டில் கோடை வெயில் இப்போதே கொளுத்த தொடங்கி விட்டது. முன்பில்லாத அளவிற்கு தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வெயில் காலங்களில் நீர், மோர், தண்ணீர் நிறைந்த பழங்களை உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் சில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டாயம் முதியோர், குழந்தைகள் வெளியே வருவதை தவிர்க்கவும். கடினமான வேலை செய்யும்போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்து கொள்ளவும். அதிகளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை பருகவும்.