மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சேர்க்க வனத்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக முதல்முறையாக வட கோவையில் மூலிகை நாற்றுகள் வெறும் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் அடுத்த கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு மூலிகை நாற்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.