கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் கே.சி வேணு கோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, கட்சியின் சார்பாக துணை முதல்வராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் டி.கே.சிவக்குமார் தன் டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது “கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம், மக்களின் நலன் மட்டுமே எங்களின் முக்கிய நோக்கமாகும். மக்களின் நலன் எதிர்காலத்தை உறுதி செய்ய நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்று கூறினார். மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையாவுடன் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து சிவக்குமார் டுவிட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.