குலசேகரன்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளத்திற்கு, பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தத் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.  தமிழகத்தின் நீண்ட நாள் கனவான குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1960களில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முன்பே கீழக்கரை வாலிநோக்கம் பகுதியில் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டு, சில காரணங்களால் அது தடைபட்டது. ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பகுமானங்களும் குலசை ஏவுதளத்தில் மிகச்சரியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.