இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில்  புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் பலத்த காயம் அடைந்த அவருக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கார் விபத்துக்குள்ளானதில் இருந்து ரிஷப் பந்த் எந்த கிரிக்கெட்டிலும் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல் சீசன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்த தொடரிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை.

இந்தியாவின் விக்கெட் கீப்பரான பன்டின் கார் விபத்தின் விளைவாக, அவருக்குப் பதிலாக சிறந்த விக்கெட் கீப்பரை இந்திய அணி இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது. அவரது இடத்திற்கு கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கே.எஸ்.பாரத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

எனவே ரிஷப் பண்ட் எப்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில்  புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். NCAவில் இருந்து 3 புகைப்படங்களைப் பகிர்ந்து, மகிழ்ச்சியாக இருங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.. பதிவில் அவருடன் போஸ் கொடுக்கும் நபரை குறிப்பிடாததால் அவருடன் இருக்கும் நபர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதைப்பார்த்து விரைவில் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்  இன்ஸ்டாவில் பதிவேற்றிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..