தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட முகாம்கள் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி உடன் முகாம்கள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்களின் வசதிக்காக வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் அதனை முன்னிட்டு கிராம சபை கூட்டங்களும் நடைபெறும். எனவே ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத்தொகைக்காக திட்டமிடப்பட்டிருந்த முகாம்கள் நடைபெறாது எனவும் இதற்கு பதிலாக தமிழகம் முழுவதும் 34,000 இடங்களில் வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறக்கூடிய முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.