தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை முதல் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தொடங்குகிறது. வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு முகாமிலையே வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.