தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நினைவேற்றி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல்வர்  முக ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான டோக்கன்கள், விண்ணப்ப விநியோகம் நாளை (ஜூலை 20) முதல் தொடங்க உள்ளது. யார் எந்த நாளில் முகாமில் பங்கேற்பது உள்ளிட்ட விவரங்கள் படிவத்தில் இருக்கும் என்றும், முகாம் நடக்கும் இடம் குறித்து ரேஷன் கடைகளில் தமிழில் பலகை வைக்கப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.