மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பிரத்தியேக ஏடிஎம் கார்டு வெளியாகியுள்ளது. அந்த ஏடிஎம் கார்டுகளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்ற அட்டை படத்துடன் பெண்களின் உருவங்கள் உள்ளன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நாளை இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.