தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து, ஆக.4ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, டோக்கன் விநியோகம் செய்யும்போது, இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்பம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்போர் விவரங்களை குறித்து வைக்கவும், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 60% விண்ணப்பம், டோக்கன் விநியோகம் செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.