மகர சங்கராந்தி இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த நாளில் மரங்களை வெட்டவும் கத்தரிக்கவும் கூடாது. மேலும் துளசி இலைகளை கூட கிழிக்க கூடாது. மகர சங்கராந்தி இந்து மதத்தில் ஒரு நல்ல நாளாகும். எனவே இந்த நாளில் சாத்வீகத்தை கடைபிடிக்க வேண்டும். இறைச்சி மற்றும் மதுபானங்களை தவிர்க்க வேண்டும். தவறுதலாக கூட இன்று மாமிசம் சாப்பிடக்கூடாது. மேலும் வெங்காய மற்றும் பூண்டு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.