போலி பில் பட்டியல் தயாரித்து தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தினால் வணிகர்களின் ஜிஎஸ்டி பதிவு முடக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று வணிகவரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேசிய அமைச்சர், பதிவுத்துறையில் அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடைய வேண்டும். போலி பில் பட்டியல் தயாரிக்கும் மனிதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.