உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள டியோரியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஹித் ஜெய்ஸ்வால். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த ரோஹித் ஜெய்ஸ்வால் பாம்பு ஒன்றை பிடித்து அதனுடன் விளையாடி உள்ளார். மேலும் அதனை காணொளியாகவும் பதிவு செய்துள்ளார். அந்த காணொளியில் பாம்பை சிவன் போன்று தனது கழுத்தை சுற்றி போடுவதும் அதனை தனது நாக்கை கடிக்க வைப்பதுமாக ஆபத்தான காரியங்களில் ரோஹித் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இதில் ஒரு கட்டத்தில் அவரை பாம்பு கடித்துவிட விஷம் ஏறி பரிதாபமாக ரோஹித் ஜெய்ஸ்வால் உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் ரோஹித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.