கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் டிக்கெட்  கட்டணமானது உயர்த்துவது குறித்து முடிவெடுக்க ஒழுங்குமுறை குழுவை அமைக்குமாறு அரசு பேருந்துகளுக்கு மாநில நிதித்துறை பரிந்துரை செய்தது. இந்த நிலையில் அந்த குழு இன்னும் அமைக்கப்படவில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார். இதனால் பஸ் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், முந்தைய அரசாங்கத்தால் 2022ல் முன்னாள் அதிகாரி எம் ஆர் ஸ்ரீனிவாச மூர்த்தியின் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மூலமாக நலிவடைந்த மாநில சாலை போக்குவரத்து கழகங்களை மறு செய்முறை அமைப்பதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது. அரசு பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க பொது போக்குவரத்து கட்டண குழுவை அமைக்க வேண்டும் என்று ஒரு நபர் குழு வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.