சேலம் சின்ன கொல்லப்பட்டியில் கார்த்திக் ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு நான்கு மாதங்கள் ஆன பெண் குழந்தை உள்ளது. ஈஸ்வரி தனது குழந்தைக்கு ஆதிரை என பெயர் சூட்டினார். மூன்று மாதங்கள் கழித்து ஈஸ்வரி தனது குழந்தைக்கு பல்வேறு நாடுகளின் தேசிய கொடிகளை காட்டி பயிற்சி அளித்துள்ளார். இந்த நிலையில் நான்காவது மாதத்தில் அதிரை 32 நாடுகளின் கொடியை சரியாக தொட்டு காட்டியுள்ளார்.

அதனை ஈஸ்வரி வீடியோவாக பதிவு செய்து அக்டோபர் 7-ஆம் தேதி நோபல் உலக சாதனை புத்தகத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த வீடியோ ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஆதிரையின் பதிவு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மேலும் ஆதரிக்கு நோபல் உலக சாதனைக்கான சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. அதனை ஈஸ்வரி தனது குடும்பத்தோடு சென்று சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரிடம் காட்டி மகிழ்ந்தார்.