பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநருக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு ஐகோர்ட் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் எம்எல்ஏவான பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது.