தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் அவரின் மிகப்பெரிய கனவுப் படமாக உருவாகியுள்ளது தான் பொன்னியின் செல்வன். கல்கியின் வரலாற்று காவியமாக எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தி வந்திய தேவனாகவும், விக்ரம் ஆதித்ய கரிகாலன் ஆகவும், திரிஷா குந்தவை ஆகவும், ஐஸ்வர்யா ராய் நந்தினி மற்றும் ஊமை ராணி என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.

இதில் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நேற்று படத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே தமிழகத்தில் மட்டும் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அளவில் 30 கோடியும், உலக அளவில் 60 கோடியும் வசூல் செய்துள்ளது. இன்றும் நாளையும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அடுத்ததாக தொடர்ந்து மே 1 அரசு விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் முதல் வாரத்திலேயே இந்த திரைப்படம் 200 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.