தமிழில் சிம்பு ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். இவர் கலக தலைவன் திரைப்படத்தில் உதயநிதியுடன் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நிதி அகர்வால் அளித்த பேட்டியில், “நான் இதுவரையிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறேன்.

தற்போது முதல் முறையாக பவன் கல்யாண் ஜோடியாக ஹரஹர வீரமல்லு தெலுங்கு திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். என் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிகவும் பிரத்தியேகமான திரைப்படமாக இருக்கும். நான் திரையுலகில் அழகாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதோடு நடிப்பிலும் தினசரி புது புது விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். கதாபாத்திரங்களை புரிந்துகொண்டு நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். மேலும் திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்க விருப்பமாக உள்ளேன்” என்று அவர் கூறினார்.