சென்னையில் உள்ள ரயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் பேருந்து ஆகியவற்றில் பயணிப்பதற்கு பயனர்கள் பயண கட்டணத்தை செலுத்த ஏதுவாக தேசிய பொது இயக்க அட்டை கொண்டுவரப்பட்டது. இது சிங்காரச் சென்னை என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த அட்டை சென்னையில் மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தி பயணம் செய்ய ஏதுவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் மட்டும் இந்த அட்டையை 900 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.