
நாடு முழுவதும் மக்களின் அடிப்படை தேவைகளில் சிலிண்டர் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் சிலிண்டர் வாங்குவதில் சிரமப்படுகின்றன. இதனால் விலை உயர்வை கருத்தில் கொண்டு சிலிண்டருக்கு அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வந்தாலும் அது போனதுமானதாக இல்லை. இதனால் சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சமையல் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்து அறிவித்தது.
இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கோவாவில் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டு 14.42 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 903 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் கோவை அரசு 275 ரூபாய் மானியம் கொடுப்பதால் வெறும் 428 ரூபாய்க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்படுகின்றது. அந்தியோதயா அன்னை யோஜனா அட்டையுடன் பெயர் இணைக்கப்பட்டுள்ள நபர்கள் இந்த சலுகையை பெறலாம் என்று அரசு அறிவித்துள்ளது.