தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரி பத்தாம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பரிசு தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்க சாமியானா  பந்தல்கள் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த சிரமமும் இன்றி பரிசுத்தொகுப்பு பெற ஏற்பாடு நடைபெற்று வருகிறது.