தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பொங்கல் தொகுப்புடன் ரொக்க தொகை வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி, கேலோ இந்தியா நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்க நாளை பிரதமரை சந்திக்கிறேன். அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும். இளைஞர் அணி மாநாடு தேதி குறித்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.