நாட்டில் தற்போது பைக் டாக்ஸிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பைக் டாக்ஸிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988 கீழ் பைக் டாக்ஸி இயக்குவது விதிமீறல் என்று எச்சரித்துள்ள டெல்லி அரசு முதல் முறை குற்றம் செய்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் இரண்டாம் முறை குற்றம் செய்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது