பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு தடை விதித்து ஆந்திர மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற டிசம்பர் 28ம் தேதி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் நெரிசல் காரணமாக 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணி நடத்த அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தடை விதித்து உள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் பேரணி பொதுக் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தடை அறிவிப்பு எதிர்க் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.