தென் இந்திய திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது ராஷ்மிகா பிஸியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா, “என் வீட்டிற்கு வரும் பெரியவர்களின் பாதங்களை தொட்டு வணங்குவதை வழக்கமாக வைத்துள்ளேன். அதோடு எனது வீட்டில் பணியாற்றும் உதவியாளர்களின் கால்களை தொட்டு வணங்குகிறேன். எனக்கு எல்லாருமே சமம்தான்”என அவர் கூறியுள்ளார்