நாட்டின் 77வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அதன் பிறகு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம், மேலும் 500 மகளிர் பயன்பெறும் வகையிலும் மூன்றாம் பாலினத்தவரும் பயன் பெறும் வகையிலும் விரிவு படுத்தப்படும் என்றும், சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகே 6.9 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.