தமிழகத்தில் இன்று  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற பெண்களுடைய பெண்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்க முதல்கட்டமாக ஒரு ரூபாய் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஒருசிலருக்கு வரவு வைக்கப்பட்டு விட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மகளிர் உரிமை தொகையான ரூ.1,000 உங்கள் வங்கி கணக்கில் வந்து விட்டதா என்பதை அறியலாம். இந்தியன் பேங்க் வாடிக்கையாளர்கள் 092895 92895 என்ற எண்ணுக்கும், ஐசிஐசிஐ 022 30256767 என்ற எண்ணுக்கும், கனரா வங்கி 092892 92892 என்ற எண்ணுக்கும் மிஸ்டு கால் கொடுத்தால் பேலன்ஸ் மொபைலுக்கு SMS வரும். இதேபோல் மற்ற வங்கியின் எண்களை பயன்படுத்தி இருப்பை அறியலாம்.